20 கால்விரல்கள் , 12 கைவிரல்கள் கொண்ட என்னை ஒரு மிருகமாக நினைத்து ஊரைவிட்டே தள்ளிவைத்த உறவினர்கள் மற்றும் மக்கள் !… சமூகத்தால் முடக்கப்பட்ட நபர் ?…. - cinefeeds
Connect with us

TRENDING

20 கால்விரல்கள் , 12 கைவிரல்கள் கொண்ட என்னை ஒரு மிருகமாக நினைத்து ஊரைவிட்டே தள்ளிவைத்த உறவினர்கள் மற்றும் மக்கள் !… சமூகத்தால் முடக்கப்பட்ட நபர் ?….

Published

on

ஒடிசாவின் குமாரி நாயக் (63). வயதான இந்த மூதாட்டி, பிறக்கும் போதே 12 விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்துள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை வித்தியாசமாக பார்க்க தொடங்கியுள்ளனர். வயதானப் பிறகும், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியது உள்ளதால், வேதனை அடைந்துள்ளார். ‘நான் பிறக்கும் போதே இதேபோன்று தான் பிறந்தேன். எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால், எனது உடலில் உள்ள இந்த மாற்றத்தை சரிசெய்ய, எந்த சிகிச்சையும் செய்ய முடியவில்லை. மூடநம்பிக்கை காரணமாக, எனது அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், என்னை சூனியக்காரி என்று நம்பி, என்னை விட்டு ஒதுங்கியுள்னர்.

சில நேரங்களில், இதை நினைத்து மிகுந்த வேதனையடைந்து, வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பேன். தற்போது 63 வயதாகும் நான், மற்றவர்களை போல, சாதரண வாழ்க்கை வாழமுடியவில்லை’ என்றார்.மிகவும் இரங்கிய மனம் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘இந்த கிராமம் சிறிய கிராமம் என்பதால், மக்கள் மூடநம்பிக்கையால் இதுபோல் செய்கின்றனர்.

Advertisement

மருத்துவத்தின் மூலம் இதை சரிசெய்யலாம் என்று தெரிந்தாலும், ஏழ்மையால், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்’ என்று வருத்தம் தெரிவித்தார்.
பிறவியிலேயே குறைபாடுகளுடன் பிறந்த மூதாட்டி ஒருவர், தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரால், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in