TRENDING
போலீசை ‘தாங்கிய இளைஞர் கைது’… “பின் பாத் ரூமில் விழுந்து” கை,கால்கள் முறிந்தது… எப்படி ஒரே ‘சமயத்தில் எல்லோரும் விழுந்த்னர்’?வெளிவந்த உண்மை.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளார் உச்சிப்புள்ளி பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த தகறாரு குறித்து விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மது போதையில் இருந்த சில வாலிபர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும் தாக்குதல் நடந்த சம்பவம் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV-கேமராவில் பதிவான காட்சியை பார்த்த போது அந்த இளைனர்கள் அருகில் உள்ள நாகாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டது.
தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் இனிமேல் என் போல யாரும் தவறு செய்யதிங்க என்று உருக்கமாக பேசி வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது
கைது செய்யப்பட்ட கணேசன் கை மற்றும் கால்கள் முறிந்து நிலையில் உள்ளார். கேட்டல் பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறுகிறார்.இதனை பார்த்தவர்கள். இந்த காயங்களை பார்க்கும் போது கீழே விழுந்த போல தெரியலே என்று கூறுகிறார்கள். மேலும் கைதான கணேசன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
