CINEMA
கவுண்டமணி-செந்தில் கூட்டணி பிரிந்தது இதனால் தானா..? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை..!!

80ஸ் காலகட்டத்தில் வெளியான தமிழ் படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடி தான் டாப்பில் இருக்கும். கவுண்டமணி செந்தில் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகளுக்கு கூட இவர்களைப் பற்றி தெரியும். கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் சினிமாவை ஆண்டார்கள். தொடர்ந்து ஒன்றாகவே இருவரும் காமெடியோடு பயணம் செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்கள். ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் கவுண்டமணி செந்தில் வெற்றி கூட்டணி ஏன் பிரிந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கவுண்டமணி – செந்தில் இணைந்து நடித்தார்கள்.
கரகாட்டக்காரன் படத்தில் வாழைப்பழ காமெடி இன்றும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. உங்களால் தான் படம் ஓடுகிறது நீங்கள் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை என்று செந்திலிடம் சிலர் தவறாக சொல்ல இதனை கவுண்டமணி இடமே சொல்லியிருக்கிறார் செந்தில். இதனால் இருவரும் தனித்தனியாக நடிப்போம் என்று கூறியிருக்கிறார்கள். கவுண்டமணி இரண்டாவது ஹீரோவாக எல்லா படங்களும் நடிக்க தொடங்கி வெற்றியடைந்தார். ஆனால் தனியாக காமெடி படங்களில் நடித்த செந்தில் படங்கள் எதுவும் ஓடவில்லை. ஒரு கட்டத்தில் உண்மையை புரிந்து கொண்ட செந்தில் கவுண்டமனியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் ஒன்றாக நடித்த கூட்டணி சரியாக அமையாமல் போனது.