LATEST NEWS
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்..! “உடனே கேஸ் ஏஜென்சிக்கு ஓடுங்க… இல்லனா சிலிண்டர் கிடைக்காது..” மத்திய அரசின் திடீர் அதிரடி உத்தரவு..!!
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் தங்களது eKYC விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கட்டாய அறிவுறுத்தல் விடுத்துள்ளன. போலியான இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் மானியம் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ அல்லது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக ஆன்லைனிலோ எளிதாக இந்த eKYC நடைமுறையை நிறைவு செய்யலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவான ஆகஸ்ட் 16-க்குள் eKYC அப்டேட் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், எரிவாயு விநியோகமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, எரிவாயு நுகர்வோர்கள் உடனடியாகத் தங்கள் ஆதாருடன் எரிவாயு இணைப்பை இணைத்து eKYC அப்டேட்டை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
