LATEST NEWS
“என் பணம் தாத்தா.. கொடுங்க ப்ளீஸ்..!” நடுரோட்டில் காலில் விழுந்து அழுத மாணவி… இணையவாசிகளின் ரத்தத்தைக் கொதிக்க வைத்த வீடியோ..!!
சீனாவில் நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர் தான் தவறவிட்ட 1,000 யுவான் பணத்தை மீட்கப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தவறவிட்ட பணத்தை அக்கம் பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் எடுத்துத் தன் வசமாக்கிக் கொண்ட நிலையில், அதை உணர்ந்த மாணவி உடனடியாகத் தன் பணத்தைத் திருப்பித் தருமாறு கதறி அழுது கேட்டுள்ளார். இருப்பினும், அந்த முதியவர் பணத்தைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் மாணவியின் நிலைக்கு இரக்கப்பட்டு, தன் சொந்தப் பையிலிருந்து 200 யுவான் பணத்தைக் கொடுத்து உதவ முன்வந்தார்.
الصين 🇨🇳
طالبة صينية في المرحلة الإعدادية أسقطت 1000 يوان (نحو 148 دولارًا) دون أن تنتبه.
التقطت امرأة عجوز المبلغ واحتفظت به، وعندما طالبتها وتوسلت اليها بإعادته نشب بينهما خلاف.
الرجل الذي كان يمر بجانبهم تعاطف مع الطالبة فأعطاها 200 يوان (نحو 30 دولارًا) من ماله الخاص.
لكن… pic.twitter.com/5Bb2y2PfH5— ڪنان (@aaat__7) August 8, 2026
ஆனால், தன் உழைப்பிலும் உரிமையிலும் உறுதியாக இருந்த அந்த மாணவி, அந்த 200 யுவானை ஏற்க மறுத்து, தனக்குச் சொந்தமான முழு 1,000 யுவான் தொகையையும் மீட்பதில் தீவிரமாக இருந்தார். சீனாவில் சாலையில் கண்டெடுக்கும் பொருட்கள் மற்றும் பணம் அதை முதன்முதலில் எடுப்பவருக்கே சொந்தம் என்ற விசித்திரமான மற்றும் தவறான நடைமுறை தர்க்கம் நிலவி வருவதால், இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த உரிமையை மீட்டெடுப்பதே பெரும் போராட்டமாக மாறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
