LATEST NEWS
“நீங்கள் எங்கள் விருந்தினர்..!” எல்லைகளைத் தாண்டிய பாசம்… இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே இவ்வளவு ஆழமான நட்பு ஏன்..?!
ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியர்களைத் தங்கள் சகோதரர்களாகக் கருதுகின்றனர். அங்குச் செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் எப்போதும் தங்கள் நேர்மறையான அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற லவ்பிரீத் ஜாகி என்ற இந்திய வோல்கர், இன்ஸ்டாகிராமில் “இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு அன்பு” என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். 1.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்ற இந்த வீடியோவில், அவர் தன்னை ஒரு பாகிஸ்தானியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது எதிர்வினை முற்றிலும் மாறியது. அங்கிருந்த ஒருவர், “நீங்கள் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், என்னை இங்கேயே கொன்றிருப்பீர்கள்” என்று கூறியபோதிலும், பயணி ஒரு இந்தியர் என்ற உண்மை தெரிந்ததும் அவரை அன்போடு கட்டித் தழுவிச் சகோதரர் என அழைத்தார்.
அந்த இந்தியப் பயணி எங்கு சென்றாலும் உபசரிப்புக்காகப் பணம் வாங்க யாரும் தயாராக இருக்கவில்லை. இந்தியா எப்போதும் ஒரு சகோதரனாக இருக்கும் என்றும், இந்த உறவு தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் என்றும் அந்த ஆப்கானியர் கூறினார். லவ்பிரீத் ஜாகி மற்றொரு கடைக்கும், தெருவோர உணவகங்களுக்கும் சென்று சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க முயன்றபோதெல்லாம், “நீங்கள் எங்கள் விருந்தினர், நாங்கள் உங்களிடமிருந்து பணம் வாங்க மாட்டோம்” என்று கூறி பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டனர். அதோடு, உள்ளூர் மக்கள் லவ்பிரீத்துடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டதுடன் அவரை வழியனுப்பவும் வந்த காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
https://www.instagram.com/reel/DZzwnmRSsl8/?utm_source=ig_web_button_share_sheet
இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்பின் அடித்தளம் மதம் அல்லது அரசியலை விட வரலாறு, வளர்ச்சி, ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்களிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் மீதே அதிகம் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கானிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்க வருகிறார்கள். இந்த வீடியோவைப் பார்த்த இந்தியப் பயனர்கள் கருத்துப் பகுதியில் “இந்தியா-ஆப்கானிஸ்தான் சகோதரர்கள்” என்று பாராட்டி வரும் நிலையில், ஒரு பெண் பயனர் “நீங்கள் ஒரு பெண் பயணியாக இருந்தால், நிலைமை வேறுவிதமாக இருக்கலாம்!” என்றும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
