LATEST NEWS
என்னது அப்பா மீண்டும் வருவாரா..? எங்க விஜய் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது… கே.கே.என்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு மாஸ் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்…!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றி, கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்த சூழலில், பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. முன்னதாக கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறித்து முதல்வர் விஜய் “அப்பாவை காணோம்…” எனக் கூறிய கருத்து, திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கருத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.என்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “மக்களின் துயர் துடைத்த தலைவராக மு.க. ஸ்டாலின் செயலாற்றினார். விரைவில் மீண்டும் திமுகவின் ஆட்சி அமையும். ‘அப்பாவை காணோம்’ என விமர்சிப்பவர்கள் வருத்தப்படக் கூடாது; அவர் மீண்டும் இந்தச் சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்கும் போது, எதிரணியில் இருக்கும் நீங்கள் யாரும் இந்த அவையில் இருக்க மாட்டீர்கள்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதற்கு உடனடியாகத் தவெக தரப்பில் இருந்து பதிலடி கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் ஆட்சி நடக்கும் வரை, அரசியல் களத்தில் திமுகவினரால் மீண்டும் தலைதூக்கவே முடியாது” என்று உறுதியாகப் பதிலளித்தார். இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் நிலவியது.
