LATEST NEWS
முதல்வர் விஜய்க்கு அடுத்த சிக்கல்.. பாலியல் புகாரில் சிக்கிய தவெகவின் ‘வலதுகரம்’… கதறியும் கைவிரித்த தலைமை.. தவெக பெண் நிர்வாகி அளித்த பரபரப்பு புகார்..!!
தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள பாலியல் புகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியின் பிரமுகர்கள் மீதே பெண் நிர்வாகி ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கடுமையான அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. கட்சியில் பெரிய பொறுப்புகளைப் பெற வேண்டுமென்றால் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறித் தொடர்ந்து பாலியல் அச்சுறுத்தல் அளித்து வந்ததாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி அளித்துள்ள மனுவில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் தன்னிடம் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப்பில் ஆபாசமாகப் பேசியதாகவும், தகாத புகைப்படங்களை அனுப்பித் தொந்தரவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்; இதுகுறித்து கட்சியின் அமைப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் கண்ணீருடன் நேரில் சென்று முறையிட்ட போதிலும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகக் கைவிட்டுவிட்டதாக அவர் தனது மனுவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இக்கொடூரச் செயல்களைத் தட்டிக் கேட்டதற்காகத் தனது செல்போனைப் பறித்துச் சென்றதுடன், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது; சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகிக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதும், உயர் தலைமைகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
