CRIME
“அய்யோ கடவுளே.. 48 மணி நேரப் போராட்டம்… இறுதியில் பிரிந்த 2 உயிர்கள்..!” 4 மருத்துவமனைகள் அலைக்கழித்த கொடூரம்… 26 வயது கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கர்ப்பிணிப் பெண் ரச்னா, கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக 48 மணி நேரத்தில் 4 மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 27 அன்று கோவிந்த்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 27,000 ஆகக் குறைந்து சிறுநீரகச் செயலிழப்பு அறிகுறிகள் இருந்ததால், அல்வார் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அரசு 108 ஆம்புலன்ஸ் விதிகள் தொடர்பான குழப்பம் காரணமாகக் குடும்பத்தினர் அவரை முதலில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தனியார் மருத்துவமனையில் பல மணி நேரச் சிகிச்சைக்குப் பிறகும் முன்னேற்றம் இல்லாததால், ஜூலை 28 அன்று மீண்டும் அல்வார் அரசு மகளிர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அவருக்கு இரத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் ஏற்றப்பட்டன. எனினும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், குடும்பத்தினர் அவரை அங்கிருந்து நிம்ஸ் என்ற மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், ஜூலை 29 மாலை சுமார் 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரச்னாவும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
14 முதல் 16 வார கர்ப்பிணியாக இருந்த ரச்னாவுக்கு ஆரம்பத்தில் லேசான இரத்த சோகை மட்டுமே இருந்ததாகவும், அவரது கர்ப்பம் அதிக ஆபத்துள்ளதாகப் பட்டியலிடப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் முறையான அவசரச் சிகிச்சை அளிக்கப்படாததும், ஆம்புலன்ஸ் விதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்கள் குறித்துப் பெற்றோருக்குச் சரியான விழிப்புணர்வு இல்லாததுமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அரசு சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
