LATEST NEWS
“லாட்டரி, பிளாக்ல டிக்கெட் வித்தவங்க எல்லாம்” இன்னைக்கு அமைச்சரா இருக்காங்க… TVK அரசு மீது பரபரப்பு குற்றசாட்டு வைத்த உதயநிதி..!!
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது சமூக ஊடக விளம்பரங்களை மட்டுமே மையமாகக் கொண்ட “ரீல்ஸ் ஆட்சி” நடைபெறுவதாக உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பணப் புகார்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் மலிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் பிளாக் டிக்கெட் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்றவர்கள் இன்று அமைச்சர்களாகப் பதவி வகிப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது என சாடினார். மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, வெறும் விளம்பரங்களை மட்டுமே நம்பி இந்த அரசு இயங்கி வருவதாக அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
