CINEMA
மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி…. உடனே இன்று அவசர கூட்டத்தை கூட்டும் விஜய்…!!

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று இக்கட்சி அவசரமாக ஆலோசனையும் நடத்துகிறது. முன்னதாக மாநாட்டிற்கு வருவோர் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
மேலும் பெண்கள், பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யக்கூடாது. அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.