LATEST NEWS
“வேற லெவல் ஐடியா..!” ரூ.40 டோல்கேட்டுக்கு 10 நிமிஷம் சீன் போட்டு சண்டை போட்ட பெண்… ஒரே நொடியில் ஆஃப் செய்த ஓட்டுநர்.. இணையத்தில் வைரலாகும் சிரிப்பலை சம்பவம்..!!
மாலை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, ஒரு ஏழைப் பெண் உபெர் டாக்சியைப் பதிவு செய்தார். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கொண்ட அந்தப் பயணத்தின் இடையே ஒரு சுங்கச்சாவடி வந்ததால், அதற்கு ரூ.40 கட்டணமாகச் செலுத்தப்பட்டது. கார் தனது இலக்கைச் சென்றடைந்ததும், மொத்தப் பயணக் கட்டணம் ரூ.130 ஆனது. அப்போது ஓட்டுநர், “மேடம், பயணக் கட்டணம் ரூ.130 மற்றும் சுங்கக்கட்டணம் ரூ.40 என மொத்தம் ரூ.170 கொடுங்கள்” என்று கேட்டார். ஆனால், அந்த கூடுதல் ரூ.40 சுங்கக்கட்டணத்தைக் கேட்டதும் அப்பெண் கடும் கோபமடைந்தார்.
https://twitter.com/Bhumika_2024/status/2083889887258763454/photo/2
சுமார் 10 நிமிடங்கள் ஓட்டுநர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அப்பெண் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி ஓட்டுநர் தன் செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதும் பதற்றமடைந்த அப்பெண், உடனடியாக ரூ.170-ஐக் கொடுத்துவிட்டு “உங்களுக்கு நேரமாகிறது, சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தார். ஓட்டுநரை ஆச்சரியப்பட வைத்த அப்பெண்ணின் இந்த நடத்தை குறித்த செய்தி வைரலாகி வருகிறது.
