LATEST NEWS
“அடக்கடவுளே..! ஒரு கையில் செல்ஃபி ஸ்டிக்… மறு கையில் நீச்சல்..!” கடலிலேயே நாட்டை விட்டு ஓடிய இளைஞர்.. பார்த்த நொடியில் உறைந்துபோன நெட்டிசன்கள்..!!
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்கு செல்ஃபி ஸ்டிக்குடன் கடல் வழியே நீந்திச் சென்றதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பிரதான நுழைவாயிலாக விளங்கும் செவுட்டா நகருக்குள், சமீபநாட்களாக ஆயிரக்கணக்கான மொராக்கோ மக்கள் கடல் வழியிலும் எல்லைத் தடுப்புகளைக் கடந்தும் சட்டவிரோதமாக நுழைய முயல்வது அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பெரும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, ஸ்பெயின் அரசு எல்லையில் கூடுதல் பாதுகாப்புப் படைகளையும் ராணுவத்தையும் களமிறக்கியுள்ளது.
मोरक्को से स्पेन तक तैरकर पहुंचे प्रवासी का वीडियो वायरल, सेउटा सीमा संकट पर फिर बढ़ी चर्चा
सोशल मीडिया पर एक वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें एक युवक सेल्फी स्टिक से वीडियो बनाते हुए समुद्र में तैरता नजर आ रहा है। वायरल पोस्ट्स में दावा किया जा रहा है कि उसने मोरक्को से… pic.twitter.com/OXmZUvr2WW— Pooja Nishad (@poojanishadlive) August 1, 2026
இருப்பினும், வைரலாகும் அந்த வீடியோவில் உள்ள இளைஞரின் அடையாளம் மற்றும் அவர் மொராக்கோவிலிருந்து நீந்தியே வந்தாரா என்பது குறித்தான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் மனிதநேயக் கவலைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அண்மையில் ஊடுருவ முயன்ற பல புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீண்டும் மொராக்கோவிற்கே திருப்பி அனுப்பியுள்ளனர். ஊடக அறிக்கைகள் மற்றும் சோஷியல் மீடியா பதிவுகளின் அடிப்படையில் வெளிவந்துள்ள இந்தச் செய்தி, எல்லைப் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் உலுக்கியுள்ளது.
