“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்..!” மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு… விஷம் அருந்தி காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்.. ஜல்பைகுரியில் பயங்கர பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்..!” மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு… விஷம் அருந்தி காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்.. ஜல்பைகுரியில் பயங்கர பரபரப்பு..!!

Published

on

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஜஹாங்கீர் ஆலம் என்பவர் தனது மனைவி ருக்ஸானா பேகத்துடன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஜஹாங்கீர் கூர்மையான ஆயுதத்தால் ருக்ஸானாவைத் தாக்கியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற தனது தாயாரையும் அவர் தாக்கவே, அவர் காலில் ஆழமான காயத்துடன் தப்பிச் சென்றார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் காண்பதற்குள், ருக்ஸானா பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மனைவியைக் கொன்ற பிறகு, ஜஹாங்கீர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்திவிட்டு, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் துப்குரி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உடனடியாக காவல்துறை அவரை கைது செய்தது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் இந்தத் தம்பதிக்கு ஒரு சிறு மகன் உள்ளான். ஆரம்பத்தில் சுமுகமாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில் சமீபகாலமாக சண்டைகள் அதிகரித்துள்ளன. ஜஹாங்கீர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகவும், மனைவியைத் தாக்கி அண்டை வீட்டாருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தற்போது ருக்ஸானாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த ஜஹாங்கீரின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் காவல் ரோந்துப் படை தீவிரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in