LATEST NEWS
பொண்டாட்டியும் வேணும்… சரக்கும் வேணும்… குடிப்பழக்கத்தால் வந்த வினை… கையில் துப்பாக்கியோடு மாமனார் வீட்டுக்கு சென்ற மருமகன்… மொட்டை மாடியில் 3 மணி நேரம் நடந்த சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான நபர் ஒருவரின் கட்டுப்பாடற்ற செயலால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. குவாலியரைச் சேர்ந்த அந்த நபரின் தொடர்ச்சியான மதுப்பழக்கம் காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவனின் குடிப்ப பழக்கத்தாலும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலும் அவதியுற்ற மனைவி, இனி அவருடன் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தக் கணவன், மனைவியைப் பழிவாங்கும் நோக்கில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மனைவியின் பெற்றோர் வீட்டிற்குப் படையெடுத்துள்ளார்.
https://twitter.com/Pappu_kumavya/status/2083836645149991046/video/1
மனைவியின் வீட்டிற்குச் சென்ற அந்த நபர், நேராக வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்றுகொண்டு மாமனார் குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் சரமாரியாகத் திட்டியுள்ளார். அதோடு நிற்காமல், அப்பகுதியில் பெரும் பீதியை உருவாக்கத் தனது மாமனார் மற்றும் மனைவியின் சித்தப்பாவை இலக்கு வைத்துத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் எந்தவிதக் காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து உடனடித் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்து நிதானமாகச் செயல்பட்டனர். துப்பாக்கியுடன் நின்ற நபரை லாவகமாகக் கையாள முடிவு செய்த போலீசார், சுமார் மூன்று மணி நேரமாக அவருடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாமர்த்தியமாகச் செயல்பட்ட காவல் துறையினர், அவரது நம்பிக்கையைப் பெற்று அவரைச் சமாதானப்படுத்தி, கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு துப்பாக்கிச் சூடு வரை சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
