LATEST NEWS
“உடனே கரைப்பகுதியை விட்டு வெளியேறுங்கள்.. !” ஜப்பானை உலுக்கிய 7.1 ரிக்டர் நிலநடுக்கம்.. அலறி அடித்து ஓடும் மக்கள்.. பீதியில் உறைந்த உலக நாடுகள்..!!
ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் உள்ள குமாமாடோ பகுதியில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஒரே வாரத்தில் ஜப்பானைத் தாக்கும் இரண்டாவது கடுமையான நிலநடுக்கமாகும். நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து கியூஷு தீவு முழுவதற்கும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடற்கரையோரப் பகுதிகளுக்கு உடனடியாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் கடும் பீதியும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
