LATEST NEWS
BREAKING: திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கைது… சற்றுமுன் அடுத்த பரபரப்பு..!
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திமுகவினர் இன்று அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், பெரும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான கீதா ஜீவன் மற்றும் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோரை தூத்துக்குடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான திமுக தொண்டர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்காலிகமாகத் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
