CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டு ஓடிய கணவன்… மரண படுக்கையில் இருந்து வெளியான பகீர் வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் பாப்புலர் மருத்துவமனையில், வரதட்சணைக் கொடுமையால் கணவனால் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்துள்ள புகாரின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இனிப்பு தயாரிப்பாளராக வேலை பார்க்கும் ஒருவருக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணத்தின் போது ரூ.50,000 ரொக்கம், மோதிரம் உள்ளிட்ட சீர்வரிசைகளை வழங்கிய போதிலும், அவனது குடும்பத்தினர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி மற்றும் கூடுதல் பணம் கேட்டு அந்தப் பெண்ணைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்துள்ளனர். வறுமையின் காரணமாக இந்த அநாகரிக அராஜகக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததால், கடந்த ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்றே அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, உடம்பில் தீயிட்டு எரித்துள்ளனர்; தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொடூரத்தைச் செய்த கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைப் பாக்கியைக் கூடச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த பெண் வாக்குமூலத்தை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் ஒரு மனைவியாக, மகளாக, சகோதரியாக அந்தப் பெண் அனுபவித்த மரண வலியும், அவரது குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் கண்ணீர் விட்டு அழும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த தேசத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதி மூச்சு வரை போராடித் தோற்றுப்போன அந்தப் பெண்ணின் உடலை வாங்குவதற்குக் கூட மருத்துவமனையின் நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாமல் ஏழைக் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இக்கொடூரக் கொலை குறித்துப் பாதிக்கப்பட்ட தந்தை சந்தௌலிமாவட்டத்தின் சையத் ராஜா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தும், தற்போது வரை காவல்துறையினர் எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமலும், குற்றவாளிகள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமலும் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
