LATEST NEWS
“ரூ.60 லட்சத்துல கட்டுன வீடு சார்.. வெள்ளம் ஒன்னும் விடாம அடிச்சுட்டு போயிருச்சு..!” நேபாளப் பேரழிவில் மொத்த சேமிப்பையும் இழந்த ஆசிரியரின் கண்ணீர் வாக்குமூலம்.. நெட்டிசன்களை உருக வைத்த சம்பவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கித் தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த ஆசிரியர் ஒருவர் நெஞ்சை உலுக்கும் சோகமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கத்தாரில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த ரூ.60 லட்சம் பணத்தைக் கொண்டு நேபாளத்தில் அவர் கட்டிய வீடு, இந்த அசுரப் பெருவெள்ளத்தில் ஒட்டுமொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பள்ளியில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், வெள்ளம் வருவதாகத் தலைமை ஆசிரியர் கொடுத்த அவசர எச்சரிக்கையால் மட்டுமே அவர் உயிர் தப்பியுள்ளார். எனினும், வீட்டின் இடிபாடுகளில் இருந்து தங்களால் ஒரு பொருளைக் கூடப் பாதுகாக்க முடியாமல் போனதாகவும், தங்களது கால்நடைகளை மட்டுமே ஓரளவிற்குப் பத்திரமாக மீட்க முடிந்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நல்வாய்ப்பாகத் தங்களது குடும்பத்தினரின் உயிர் மட்டுமே தற்பொழுது தப்பியுள்ளதாகக் கூறிய அந்த நேபாள ஆசிரியர், கத்தாரில் பணியாற்றிய போது தமிழ் நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்த நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தற்பொழுது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நேபாள மக்களுக்காகத் தமிழ் நெஞ்சங்களும், தமிழ் உள்ளங்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
