LATEST NEWS
“திருமாவளவனுக்கு பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை..” எக்ஸ் தளத்தில் அமைச்சர் வன்னி அரசு விடுத்த அதிரடி சாட்டையடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக சமூகநீதித்துறை அமைச்சரும் விசிக துணை பொதுச்செயலாளருமான வன்னி அரசு, சமூகநீதி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை காட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து நாட்டிலேயே முதன்முதலாகத் திருமாவளவனும், கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் தான் உச்ச நீதிமன்றத்தில் விரிவான வாதங்களுடன் வழக்குத் தொடர்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று நாட்டிலேயே முதன்முறையாக 2019-ஆம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துத் திருமாவளவன் தான் வலியுறுத்தினார் என்றும், அதற்குப் பிறகுதான் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துச் சட்டப் போராட்டம் நடத்தின என்றும் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார். கோவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும் கிரிமிலேயர் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் விசிக தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததை நினைவுகூர்ந்துள்ள அவர், விசிகவின் தொடர் சமூகநீதிப் போராட்டங்களின் வரலாற்றை அறியாமல் விமர்சிப்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
