LATEST NEWS
அய்யய்யோ.. கரண்ட் கம்பியின் அருகே சென்ற குழந்தை.. அடுத்த நொடியே பாய்ந்து வந்து வாயில்லா ஜீவன் செய்த நெகிழ்ச்சி காரியம்.. ஒட்டுமொத்த இணையத்தையும் அழவைத்த நாய்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று, பார்ப்பவர்களின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறு குழந்தை மின்சாரம் பாயும் ஆபத்தான பகுதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த மின்சார அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில், ஒரு விரற்கடை இடைவெளியில் அக்குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. குழந்தை ஆபத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட ஒரு நாய், ஒரு நொடி கூட யோசிக்காமல், தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று அக்குழந்தையை இழுத்து வந்து காப்பாற்றியுள்ளது. மனிதர்கள் தூங்கும்போது கூட விழித்திருக்கும் கண்கள் எவை என்பதையும், தன் குழந்தையின் உயிரைக் காக்கத் தன் உயிரையே பணையம் வைக்கும் இதயம் எது என்பதையும் இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.
விலங்குகளை நாம் வெறும் அஃறிணை உயிரினங்கள் என்று அழைக்கிறோம், ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது, மனிதர்களை விட அந்த வாயில்லா ஜீவன் அதிக மனிதநேயத்தைக் காட்டியுள்ளது என்பதை உணர முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களே மனிதர்களுக்குத் துரோகம் இழைத்து வரும் நிலையில், இந்த வாயில்லா ஜீவன்கள் இன்னும் தங்களின் விசுவாசத்திற்குச் சிறந்த உதாரணமாக விளங்கி வருகின்றன. ஆபத்தான தருணத்தில் உண்மையான பாதுகாவலனாக ஓடிவந்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய இந்த நாயின் செயல், மனித நேயத்தின் உண்மையான அர்த்தத்தை மனிதர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
