LATEST NEWS
“யாருமே எதிர்பார்க்காத கிளைமேக்ஸ்!”.. 74 ஆண்டுகால மர்மம் உடைந்தது… 52 உயிர்களைப் பலிவாங்கிய விமானம்… அட்லாண்டிக் கடலில் நடந்த அதிசயம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!
விமானப் போக்குவரத்து வரலாற்றில் 1952-ஆம் ஆண்டு, போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்று, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்தபோது இரண்டு என்ஜின்களும் செயலிழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் மீட்கப்பட்ட நிலையில், 52 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகமான சம்பவமே விமானப் பயணங்களில் அவசரகால பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தை உலகம் உணர்வதற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த கோர விபத்து நடந்து பல ஆண்டுகள் கடந்தும், கடலின் கடும் ஆழம் காரணமாக விமானத்தின் சிதைவுகளைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், 74 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2,000 அடி ஆழத்தில் அவ்விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல தசாப்தங்களாக நீடித்து வந்த தேடுதல் வேட்டை தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
