LATEST NEWS
“ஐயோ.. காப்பாத்துங்க..!” மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் உயிருக்குப் போராடும் தாய்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தாயும் குழந்தைகளும் மரத்தின் மீது ஏறித் தஞ்சமடைந்துள்ள நெஞ்சை பதறவைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளின் கூரை வரை வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடும் நிலையில், வேறு வழியின்றிப் பொதுமக்கள் மரங்களின் மீது ஏறி நின்றபடி தங்களைக் காத்துக் கொள்ளப் போராடி வருகின்றனர்.
बेहद ही भावुक करने वाला वीडियो सामने आया है। 😭
जानकारी के मुताबिक यह वीडियो असम से आया है इस वीडियो में साफ देखा जा सकता है कि बच्चे मां के साथ पेड़ पर चढ़े हुए हैं ।
बाढ़ के पानी घर के छतों के बराबर बह रही है…जान बचाने के लिए कुछ लोग पेड़ पर चढ़े हुए हैं।
छतों तक बहता… pic.twitter.com/UyTxLKelld— Sunil Kumar (@sunilku20403616) July 25, 2026
வெள்ளத்தில் கூரைகள் மூழ்கியிருக்க, மரக் கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையும், தன் பிள்ளைகளைக் காப்பாற்றத் துடிக்கும் தாயின் பாசமும் தவிப்பும் பார்ப்போரின் மனதை உருக்குவதாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அசாமில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் வீடிழந்த பொதுமக்களுக்கும் நிர்வாகத்தின் மூலம் விரைவாக உதவிக்கரம் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனைகள் குவிந்து வருகின்றன.
