LATEST NEWS
“170 ரூபாய் டிக்கெட் வேஸ்ட்.. “மும்பை மக்களின் வேகத்திற்கு முன்னால் என் முதல் முயற்சி தோல்வி..!” தென்கொரிய சுற்றுலாப் பயணியின் உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!!
தென் கொரிய சுற்றுலாப் பயணியான செஜின், இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மும்பையின் புகழ்பெற்ற புறநகர் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தானே ரயில் நிலையத்திலிருந்து 170 ரூபாய்க்கு இருவழிப் பயணச்சீட்டை வாங்கினார். இருப்பினும், நடைமேடைக்குச் சென்றதும் எங்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் குழப்பமடைந்தார். உள்ளூர் ரயில் ஒன்று வந்தபோது, பயணிகள் கதவுகளின் அருகில் திரண்டு உடனடியாக ஏறத் தொடங்கிய நெரிசல் அவரைக் திகைக்க வைத்ததால், முதல் முயற்சியிலேயே அவர் பின்வாங்க நேரிட்டது.
ரயில் பயணத்தைக் கைவிட விரும்பாத செஜின், அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்து மீண்டும் ஏற முயன்றார். ஆனால், இரண்டாவது முயற்சியும் முதலைப் போலவே தோலவியுற்றதால், விரக்தியடைந்த அவர் ரயிலில் பயணிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக வாடகைக் காரை எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இந்த அனுபவம் அவருக்கு மும்பை மக்களின் வேகமான பயணக் கலாச்சாரம் மற்றும் ரயில் வலையமைப்பின் தனித்துவத்தைப் புரிய வைத்ததுடன், அங்குள்ள மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையையும் ஏற்படுத்தியது.
https://www.instagram.com/reel/Db5edztT9EM/?utm_source=ig_web_button_share_sheet
தனது இந்த அனுபவத்தை செஜின் இன்ஸ்டாகிராமில் காணொளியாகப் பகிர்ந்து கொண்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் இந்தச் சம்பவத்தை வேடிக்கையாகக் கருதியதோடு, காணொளியில் ரயில் அவ்வளவு கூட்டமாகத் தெரியவில்லை என்றும், அவர் மிக விரைவில் முயற்சியைக் கைவிட்டுவிட்டார் என்றும் கூறினர். மேலும் செஜின் சற்றே விடாமுயற்சியுடன் காத்திருந்தாலோ அல்லது உதவி நாடியிருந்தாலோ அவரால் நிச்சயமாக ரயிலில் ஏறியிருக்க முடியும் என்றும், நெரிசல் மிகுந்த நேரங்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
