LATEST NEWS
“இவர்தான் நிஜமான பணக்காரர்..!” 2 வயதுச் சிறுமிக்கு முதியவர் கொடுத்த சர்ப்ரைஸ்… அன்பால் உலகை வென்ற தாத்தா… நெட்டிசன்களை உருக வைத்த அழகிய வீடியோ..!!
இணையத்தில் வைரலாகப் பரவி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று, உண்மையான செல்வம் என்பது பணத்தில் இல்லை, எதையும் எதிர்பார்க்காமல் உதவும் நன்மணத்தில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது. சாலையோரத்தில் பாப்கார்ன் வியாபாரம் செய்யும் ஒரு முதியவர், பிரவ்யா என்ற இரண்டு வயது சிறுமியை அன்போடு அருகில் அழைத்து, கோயிலில் பிரசாதம் வழங்குவது போல ஒரு பாக்கெட் பாப்கார்னை இலவசமாகக் கொடுக்கிறார். அந்தச் சிறுமி பாப்கார்னை வாங்கிச் செல்லும்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர் அக்கறையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் அழகிய தருணத்தை, சிறுமியின் பெற்றோர் தூரத்திலிருந்து தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DY2zhisThnB/?utm_source=ig_embed&ig_rid=AoU1w4l2uTLqfQ4oQuJVAck
பிரவ்யா சிங் என்ற அந்தச் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவளது பெற்றோரால் பகிரப்பட்ட இந்தக் காணொளி, 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. முன்பின் தெரியாத மனிதர்களின் தாராள குணமும் நன்றியுணர்வும் எவ்வளவு பெரிய பாடம் என்பதைப் பகிர்ந்த சிறுமியின் பெற்றோர், அந்த முதியவரின் அன்பிற்குப் பதிலுதவியாகத் தங்களின் முழு நிதி ஆதரவையும் அவருக்கு வழங்க முன்வந்துள்ளனர். அத்துடன், அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது மீண்டும் உதவி செய்வதாக உறுதி அளித்து இணைய சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
