LATEST NEWS
அச்சச்சோ… நெஞ்சு வலியால் துடித்த பெண்.. நொடியில் துரிதமாகச் செயல்பட்ட நடத்துனர்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பேருந்திற்காகக் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அந்தப் பதற்றமான சூழலில், அங்குப் பணியில் இருந்த பேருந்து நடத்துனர் சங்கீதா பால்வே சற்றும் தாமதிக்காமல் உடனடியாகச் செயல்பட்டு, அப்பெண்ணுக்கு சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சையை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
चलते-फिरते कब क्या हो जाए, कोई नहीं जानता।
महाराष्ट्र के संभाजीनगर में बस स्टैंड पर एक महिला यात्री को अचानक हार्ट अटैक आ गया।
ऐसे मुश्किल वक्त में महिला कंडक्टर संगीता पालवे ने अद्भुत सूझबूझ दिखाते हुए तुरंत CPR देना शुरू किया, जिससे महिला की जान बच गई।
बताया गया कि 108… pic.twitter.com/J8zftySMSg— Priya singh (@priyarajputlive) August 3, 2026
சம்பவம் நடந்த உடனே 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாமதிக்க விரும்பாத சங்கீதா மற்றும் அங்கிருந்தவர்கள், அப்பெண்ணை உடனடியாக ஓர் ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடத்துனரின் சமயோசிதமான புத்தி கூர்மையாலும், துரிதமான முதலுதவியாலும் ஒரு பெண்ணின் உயிர் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டது குறித்துப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
