LATEST NEWS
“பேச்சைக் கடந்த மௌன மொழி.. வெறும் 20 நாட்களில் இன்டர்நெட்டை கலக்கிய சிறுவன்.. சமூக வலைதளங்களை வைரலாகும் பிஞ்சு குழந்தையின் அழகிய வைரல் வ்லாக்..!
இன்றைய காலகட்டத்தில் வ்லாக்கிங் செய்து பணம் சம்பாதிக்கச் சிறந்த கேமரா திறனும், சரமாரியான பேச்சும் அவசியமாகக் கருதப்படும் நிலையில், எங்குமே பேச முடியாத ஒரு பிஞ்சுச் சிறுவன் தன் மௌனமான வெளிப்பாடுகளால் உலகையே தன் பக்கம் ஈர்த்துள்ளான். தனஞ்சய் யாதவ் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது முதல் காணொளியைப் பகிரத் தொடங்கிய இந்தச் சிறுவன், வெறும் 20 நாட்களுக்குள்ளாகவே மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து இணையத்தில் மிகப்பெரிய வைரலாகியுள்ளான். பசுமையான இயற்கைச் சூழலில் நின்று அவன் செய்யும் அழகான செய்கைகளும், தன் இதயத்தின் ஆழமான உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முயற்சிக்கும் விதமும் காண்போர் அனைவரையும் உருக வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DcGg5zqIuc1/?utm_source=ig_web_button_share_sheet
எந்தவொரு உடல் குறைபாடும் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்பதை இந்தச் சிறுவனின் காணொளிகள் உலகிற்கு உரக்கச் சொல்லித் தருகின்றன. இதுவரை வந்ததிலேயே மிகவும் அழகான ரீல் என்று பார்வையாளர்கள் கொண்டாடித் தீர்க்கும் இந்தக் குட்டி வ்லாக்கருக்கு, சமூக வலைதளங்களில் லைக்குகளும் பாசமான கமெண்டுகளும் மலைபோல் குவிந்து வருகின்றன. தன் பேச்சில்லா உலகத்தையே ஒட்டுமொத்த இணையத்தின் பேசுபொருளாக மாற்றி சாதனை படைத்துள்ள தனஞ்சய் யாதவ், பல இலட்சம் மக்களின் வாழ்த்துகளுடன் ஒரு உண்மையான இன்ஸ்பிரேஷனாக மாறி மிளிர்கிறார்.
