LATEST NEWS
அதிர்ச்சி..! அமெரிக்காவின் புதிய ‘சைலண்ட் கில்லர்’ ஏவுகணை … ஈரானில் 50 மீட்டர் தள்ளியிருந்த 21 பேர் துடிதுடித்து பலி… உலக நாடுகளை உலுக்கிய வான்வழித் தாக்குதல்…!!!
ஈரான் மீது அமெரிக்கா முதன்முறையாக லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் புதிய வகை ஏவுகணையைப் பயன்படுத்தி கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த புதிய ஆயுதப் பயன்பாடு குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
சாதாரண ஏவுகணைகளைப் போலன்றி, இந்த புதிய ஏவுகணையானது வெடிக்கும் போது கோடிக்கணக்கான மிகச்சிறிய வெடிகுண்டு சிதறல்களாக உடைந்து பரவும் தன்மை கொண்டது. இதனால் ஏவுகணை நேரடியாகத் தாக்கிய இலக்கு மட்டுமின்றி, அது வெடித்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களும் கொடூரமான முறையில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரானின் லாமெர்ட் நகர் மீது வீசப்பட்ட 3 ஏவுகணைகளின் தாக்கத்தால், 7 குழந்தைகள் உட்பட 21 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், ஏவுகணை வெடித்த இடத்தில் இருந்து மூன்று மடங்கு தூரம் வரையிலான பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக ‘ஏர்வார்ஸ்’ என்ற சர்வதேச அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
