LATEST NEWS
ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா..? ஜூலை 31-க்குள் இதை செய்யலனா… இலவச அரிசி கிடைக்காது..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானிய விலைப் பொருட்களைத் தொடர்ந்து பெற, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் e-KYC பதிவை ஜூலை 31-க்குள் கட்டாயமாக செய்ய வேண்டும். பணி நிமித்தமாக வேறு இடங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள், தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளிலேயே இந்த கைரேகை பதிவை மேற்கொள்ளலாம். AAY மற்றும் PHH ஆகிய முன்னுரிமைப் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் எவ்வித தடங்கலும் இன்றி பலன்களைப் பெற இந்த கெடுவுக்குள் e-KYC-ஐ நிறைவு செய்வது அவசியமாகும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள இறந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜூலை 25-க்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகியோ அல்லது உள்ளூர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை எண்ணைச் சமர்ப்பித்தோ நீக்கம் செய்ய வேண்டும். கைரேகை தெளிவாகப் பதிவாகாத குழந்தைகள் மற்றும் முதியவர்கள், முதலில் தங்கள் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் விழித்திரைப் பதிவைப் புதுப்பித்த பிறகே e-KYC சரிபார்ப்பைச் செய்ய முடியும்.
முதியோர்கள், உடல்நலக்குறைவு அல்லது இயலாமை காரணமாக ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களே நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு வந்து பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்து தருவார்கள். போலி ரேஷன் கார்டுகளைத் தவிர்க்கவும், தகுதியற்றவர்களைக் கண்டறிந்து நீக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உடனடியாக விரல்ரேகை பதிவு மற்றும் பெயர் நீக்கம் போன்ற பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
