VIDEOS
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவின் வளைகாப்பு விழா…. இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ….!!!!
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான சீரியல் தான் செவ்வந்தி. இந்த சீரியலில் நடிகர் ராகவ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இவர் சினிமாத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து சீரியலில் நாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். இவர் கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவர் கேளடி கண்மணி மற்றும் மகராசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போதைய செவ்வந்தி சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் திவ்யாவிற்கு திருமணம் நடைபெற்றது.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியலின் நாயகன் சித்து என்கிற அர்னவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நாள் காதலர்கள்.
இதனிடையே திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. அதாவது திவ்யா தற்போது இரண்டாவது திருமணம் தான் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரின் மகளின் பெயர் ஜெய்சனா. இதனிடையே அர்ணவ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி திவ்யா பல வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த நிலையில் இது மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது.
தற்போது அர்ணவ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் திவ்யாவின் வளைகாப்பு மிக எளிமையாக வீட்டில் நடைபெற்று உள்ளது. அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.