Uncategorized
அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் … இந்த இரண்டு உணவுகள் சாப்பிட தடை…???? இதிலிருந்துதான் வைரஸ் தொற்று ஆரமிக்கிறது…
சீனாவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த நாட்டில் உள்ள மக்களிடத்தில் வனவிலங்கு உணவுகள் உண்ண தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் எந்த ஒரு ஊடகங்களிலும் வனவிலங்கு விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் வனவிலங்குகளின் வர்த்தகத்தையும் அமைச்சகம் தடை செய்துள்ளது. இந்த நோய்க்கு அடிப்படை காரணமே வனவிலங்கு உண்பதால் என்பது கண்டு பிடிக்கபட்டுள்ளது.
மேலும் இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் 70 வதுக்கும் மேற்பட்டோரை பழிவாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வைரஸ் 800க்கு மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கியது. மேலும் சீனாவில் இதே போன்று ஒரு மர்ம வைரஸ் கடந்த 2002-2003 SARS என்கிற ஒரு கொடிய தொற்றுநோய் வந்தது. அந்த நோய் வனவிலங்கு உட்கொண்டதால் தான் வந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொடிய வியாதி 17 நாடுகளில் 8,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பரவியது, அவர்களில் 800 பேர் கொல்லப்பட்டனர். அதுபோல் தான் தற்பொழுது புதிதாக ஒரு நோய் வந்துவுள்ளது. அதனால் சீனாவில் வவ்வால் மற்றும் பாம்புக்கறி சாப்பிட தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.