ஈரானில் அலி கமேனி படுகொலைக்குப் பின் அடுத்த பேரதிர்ச்சி..! திருமண நிகழ்ச்சியில் விழுந்த அமெரிக்க ஏவுகணை… சிறுவன் உட்பட 4 பேர் பலியான கொடூரம்… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஈரானில் அலி கமேனி படுகொலைக்குப் பின் அடுத்த பேரதிர்ச்சி..! திருமண நிகழ்ச்சியில் விழுந்த அமெரிக்க ஏவுகணை… சிறுவன் உட்பட 4 பேர் பலியான கொடூரம்… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Published

on

தெற்காசிய நாடான ஈரானில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து ஈரான் செம்பிறை சங்கம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் கவுண்டியின் குஹெஸ்டாக் நகரில் திருமண விழா நடந்துகொண்டிருந்த குடியிருப்பு வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதலின் சிதறல்கள் விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் பலியானதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிபாடுகளுடன் காணப்படும் காட்சிகளும், பின்னணியில் மக்கள் அலறும் சத்தமும் கொண்ட வீடியோவை ஈரானிய அரசு கணக்கு பகிர்ந்துள்ளது. முன்னதாக, ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் துணை ஆளுநர் அகமது நபீசி, “இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும்” மாநில தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்த சிரிக் கவுண்டி பகுதி அமைந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைவீரர்கள் மீதும் ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Advertisement

அதேவேளையில், சிரிக் கவுண்டியில் எந்த இலக்கைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பல நகரங்கள் மற்றும் தெற்கு கெர்மான் மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்திலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28 முதல் ஈரான் அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாடு முழுவதும் நடத்திய பதில் தாக்குதல்களும், ஹோர்முஸ் பகுதியைச் சுற்றித் தொடரும் மோதல்களும் அமைதி ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகளைக் குறைத்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in