LATEST NEWS
ஜெயிலர் வெற்றி.. 100 குழந்தைகளுக்கு உதவ கலாநிதி மாறன் மனைவி செய்த செயல்.. குவியும் வாழ்த்துக்கள்..!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.
இதுவரை உலக அளவில் சுமார் 600 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எடுக்க செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் இந்த திரைப்படம் லாபம் கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகிழ்ச்சியில் உள்ளார்.
இதனால் நடிகர் ரஜினிக்கு 110 கோடி வரை ஷேர் வழங்கியது மட்டுமல்லாமல் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் போலவே இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கும் குறிப்பிட்ட தொகையை செக்காக வழங்கி காரையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை குழந்தைகளுக்கு உதவி செய்து கலாநிதி மாறன் கொண்டாடியுள்ளார்.
அதாவது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட நூறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு கோடிக்கான காசோலையை கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி அப்போலோ சேர்மேனிடம் வழங்கியுள்ளார். இதற்கு காரணம் ரஜினிகாந்த என்று கூறப்படும் நிலையில் தற்போது இவரின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க