LATEST NEWS
“கெத்தாக சன்ரூஃப் வழியா வெளியே வந்தான்… ஆனா..” அடுத்த வினாடியே நேர்ந்த கொடூரம்… நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பெங்களூரின் வித்யாரண்யபுரா பகுதியில், ஓடும் காரின் சன்ரூஃப் வழியே வெளியே தலையை நீட்டியபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, கார் ஒரு இரும்பு கேட் பேரியரின் அடியைக் கடந்து சென்றபோது, அந்த இளைஞரின் தலை இரும்பு கேட்டில் பலமாக மோதியது. சில வினாடிகள் காட்டிய அலட்சியம், அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.
कुछ सेकंड की लापरवाही ने जिंदगी बदल दी… चलती कार की सनरूफ से बाहर निकला युवक लोहे के गेट से टकराकर गंभीर रूप से घायल हो गया।
बेंगलुरु के विद्यारण्यपुरा इलाके में एक युवक चलती कार की सनरूफ से बाहर निकला हुआ था, तभी कार एक लोहे के गेट/बैरियर के नीचे से गुजरी और उसका सिर उससे… pic.twitter.com/4MXdtSPQaq— Mandeep RajBhar (@MandeepRajBhar9) July 28, 2026
இந்த மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், அந்த இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான திடுக்கிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, ஓடும் காரில் சன்ரூஃப் பயன்படுத்துவது குறித்த பெரும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
