CRIME
“ஐயோ கடவுளே.. நள்ளிரவில் நர்ஸின் அறைக்குள் நுழைந்த காம கொடூரன்.. கற்பைக் காப்பாற்றப் போராடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத் பகடிஷெரீப் பகுதியில் நர்ஸாகப் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்பொழுது அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சையினா உல்லா என்ற நபர், நர்ஸின் அறையிலிருந்த ஜன்னல் வழியாக நள்ளிரவில் உள்ளே நுழைந்துள்ளார். தூங்கிக் கொண்டிருந்த அந்த நர்ஸை அவர் பாலியல் வன்கொடுமை செய்யக் கொடூரமாக முயன்றுள்ளார். ஆனால், அந்தப் பெண் தனது கற்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அவனிடமிருந்து தப்பிக்கக் கடுமையாகப் போராடி எதிர்த்துள்ளார்.
தன் முயற்சிக்கு அந்தப் பெண் முட்டுக்கட்டை போட்டதால் கடுமையான ஆத்திரமடைந்த சையினா உல்லா, அந்த நர்ஸின் கழுத்தை நெரித்துக் கொடூரமான முறையில் அங்கேயே கொலை செய்துள்ளார். கொலைக்குப் பின் அந்த இடத்தை விட்டு அவன் தப்பியோட முயன்றபோது, உஷாரான காவல் துறையினர் குற்றவாளியான சையினா உல்லாவை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். காவல் துறையினரின் தீவிர விசாரணையின் போது, தான் ஜன்னல் வழியே நுழைந்ததையும், பாலியல் வன்கொடுமைக்கு மறுத்ததால் நர்ஸைக் கழுத்தை நெரித்துக் கொன்றதையும் சையினா உல்லா ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
