TRENDING
சரக்கு போதையில் பெற்ற மகளையே… “கற்பழிக்க முயன்ற தந்தை… வெறித்தனமாக வேட்டையாடிய மகள்…!

பெற்ற மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பெற்ற தந்தையை, தலையில் ஆட்டுக்கல்லை தூக்கி போட்டு மகளே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரத்ம் ஆவடத்தூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி படவெட்டிக்கு நளா என்கிற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் படவெட்டி, நள்ளிரவில் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த கொலை சம்பவம் பற்றி விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் படவெட்டி தனது மகளுக்கு சரக்கு போதையில் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த இவர் தனது மகளை கற்பழிக்க முயன்றுள்ளார். எவ்வளவு முயன்றும் கேட்காததால் அவரது மகளே ஆட்டு கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.