LATEST NEWS
கடவுள்கூட கேட்டால்தான் கொடுக்கும், ஆனால்… நம்ம முதலமைச்சர் கேட்காமலேயே கொடுக்கும் சாமி.. நெகிழ்ந்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன்..!!
தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கான பணிகளைச் சிந்தாமல் சிதறாமல் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக அரசு மக்கள் போற்றும் வகையில் மிகவும் தூய்மையான ஒரு ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் முதலமைச்சர் மிகத் தீவிரமாக நினைப்பதாகவும், அதற்கேற்பச் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள எல்லா மதக் கடவுள்களும் நாம் வேண்டிக் கேட்டால் மட்டுமே கொடுப்பார்கள், ஆனால் தற்போதைய தமிழ்நாட்டில் மக்கள் கேட்காமலேயே அள்ளித் தரும் ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்று அவர் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், தவெக அரசு மீது எந்தவொரு உண்மையான குறையையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினாலேயே, எதிர்க்கட்சியினர் தேவையின்றிப் பல்வேறு அவதூறுகளை வீசி வருவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
