LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்..! தலைக்கு மேல் பறந்த மின் பொறிகள்..! உயிரை மயிரிழையில் காப்பாற்றிய அந்த ஒரு பிளாஸ்டிக் பிடி..! மழைக்காலத்தில் குடை பிடித்தால் சாவு நிச்சயம்…! ரயில்வே ஊழியர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை..!!
சோஷியல் மீடியாவில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயில்வே ஊழியர் ஒருவர் நள்ளிரவு 12:30 மணிக்குக் கனமழையில் பணிக்குச் செல்லும்போது நடந்த ஒரு ஆபத்தான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். மின்மயமாக்கப்பட்ட ரயில்வே தண்டவாளத்தின் கீழ் அவர் குடையைப் பிடித்துக்கொண்டு நடந்து சென்றபோது, அவரது குடையின் மேல் பகுதியில் சிறிய அளவில் மின் பொறிகள் உருவாவதை இருட்டில் தெளிவாகக் காண முடிந்தது. தலைக்கு மேலே செல்லும் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் OHE வயர்களின் தூண்டல் காரணமாகவே குடையை தொடாமலேயே அதில் மின்சாரம் பாய்ந்து பொறி பறந்தது என்பதை அவர் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அந்த ஊழியர், தனது குடையின் பிடி பிளாஸ்டிக்கால் ஆனதாக இருந்ததால் மட்டுமே மின்சார அதிர்ச்சி தாக்காமல் உயிர் தப்பியதாகக் கூறுகிறார். ஒருவேளை குடையின் பிடி இரும்பாக இருந்தாலோ அல்லது பிளாஸ்டிக் உடைந்திருந்தாலோ, 25,000 வோல்ட் மின்சாரம் நேரடியாகப் பாய்ந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். குறிப்பாக, குடையில் மின்சாரம் பாயும் நேரத்தில் கால்கள் தண்ணீரில் இருந்தாலோ அல்லது தரையோடு தொடர்பு கொண்டிருந்தாலோ மிகக் கடுமையான மின் தாக்குதல் ஏற்படும் என்றும், எனவே மழைக்காலத்தில் குடையின் பயன்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன் காரணமாகவே ரயில்வே நிர்வாகத்தில் மின்மயமாக்கப்பட்ட பகுதிகளில் தலைக்கு மேலே குடை பிடிப்பதோ, தடி/கம்பிகளை உயர்த்தியோ அல்லது தண்ணீரை மேல்நோக்கி பீச்சி அடிப்போ கூடாது என்ற கடுமையான விதிமுறை பின்பற்றப்படுகிறது. நிலைமையை உணர்ந்த அந்த ஊழியர் உடனடியாகக் குடையை மூடிவிட்டு ஒரு நிழற்கூரையின் கீழ் சென்று, தண்டவாளத்தைக் கடந்த பிறகே மீண்டும் குடையைத் திறந்து சென்றுள்ளார். ‘Iron Path Duty’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த விழிப்புணர்வு வீடியோவை இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.
