LATEST NEWS
விறுவிறுப்பாக நடக்கும் பொல்லாத உலகின் பயங்கர கேம் படத்தின் இசை எந்த ஊரில் நடக்கிறது? புகைப்படங்கள்.இதோ…
தற்போது விளையாட்டையும் ஒரு மையமாக கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தில் நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, மொட்ட ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஒரு கிரைம் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி, இசை கோர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு பணிகள், சிங்கப்பூரில் உள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆர்டன்ட் ஸ்டுடியோவில், பிரபல ஒலிவல்லுநர் டேனியல் வாங் முன்னிலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிஇருக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவுபெற்றிருக்கும் நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகின்ற கோடை விடுமுறை கால வெளியீடாக அமையும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.