LATEST NEWS
“மகனே நீ ஜெயிச்சுட்ட..!” மரணப் படுக்கையில் இருந்த குழந்தையிடம் தாய் சொன்ன அந்த ‘அன்பான பொய்’.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
6 வயதான சிறுவன் உமரின் புற்றுநோய்க்கு இனிமேல் சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தான் இறக்கப் போகிறோம் என்ற கொடூரமான உண்மையை அவனது தாய் அவனிடம் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பதிலாக, அவன் புற்றுநோயை அடியோடு வென்றுவிட்டதாக அசாத்திய பொய் ஒன்றைக் கூறி, அவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் இருக்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மணியைஅவனது பிஞ்சு கரங்களால் ஒலிக்கச் செய்துள்ளார்.
தான் நோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்து விட்டோம் என்ற உன்னத நம்பிக்கையுடனும், மாபெரும் மன நிம்மதியுடனும் அந்தச் சிறுவன் சில நாட்களிலேயே அமைதியான முறையில் கண்ணை மூடி உயிர் துறந்துள்ளான். ஒரு தாயின் பாசப் போராட்டத்தையும், அந்தப் பிஞ்சு குழந்தையின் இறுதி நொடிக் கட்ட வெற்றியையும் விவரிக்கும் இந்த நெஞ்சைக் கிழிக்கும் வாழ்வியல் விபரீதக் கதை, தற்பொழுது சோசியல் மீடியாவில் உலக நெட்டிசன்களை உறைந்து போகச் செய்து அசுர வேகத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
