LATEST NEWS
மீண்டும் அதிர்ச்சியில் உலக நாடுகள்..! என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது… அதிரடி முடிவை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்..!!
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான தற்காலிகப் போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீதான எண்ணெய் விற்பனை அனுமதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதோடு வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. இந்த மோதல் போக்குக்கு மத்தியில், ஈரானுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வெறும் “நேரத்தை வீணாக்கும் செயல்” என்று டிரம்ப் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
ஈரான் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் அதை அவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்றும், எனவே தன்னைப் பொறுத்தவரை இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்பினாலும், அதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரானும் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
