CINEMA
“விஜய் கேட்டார்.. ஆனா பிரபுதேவா முடியாதுன்னு சொல்லிட்டார்….” போக்கிரி பட ரகசியத்தை உடைத்த வையாபுரி…!!
விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘போக்கிரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகர் வையாபுரி பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலில், இயக்குநர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாட விஜய் மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், பிரபுதேவாவிடம் இதை நேரடியாகக் கேட்கத் தயங்கிய விஜய், தனது விருப்பத்தை வையாபுரியிடம் தெரிவித்துள்ளார். விஜய்யின் வேண்டுகோளை ஏற்று வையாபுரியும், ஸ்ரீமனும் தொடர்ந்து வற்புறுத்திய பின்னரே, பிரபுதேவா அந்தப் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து ஆட சம்மதித்தாராம்.
ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த பிரபுதேவா, நண்பர்களின் தொந்தரவு காரணமாகவே இறுதியில் சம்மதம் தெரிவித்தார். அந்தப் பாடல் காட்சியில் இருவரும் அணிந்திருந்த உடைகளை ஒரு கடையில் நேரில் சென்று வாங்கி வந்ததே தான்தான் என வையாபுரி அந்தப் பேட்டியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் அந்தச் சூப்பர் ஹிட் நடனக் காட்சி உருவானதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய போராட்டமே நடந்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
