“ஓட்டுக்கு மட்டும்தான் அம்பேத்கர் தேவையா..?” இப்போ உங்களுக்கு பதவி கிடைச்சிருச்சில்ல… முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஓட்டுக்கு மட்டும்தான் அம்பேத்கர் தேவையா..?” இப்போ உங்களுக்கு பதவி கிடைச்சிருச்சில்ல… முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!!

Published

on

சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அங்கு கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, இரு சமூகத்தினரிடையேயான மோதல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து விஜய் முதலமைச்சரான பிறகும் இந்தச் சிலை திறக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள வேல்முருகன், தேர்தலுக்கு முன்பு தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அம்பேத்கரைத் தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவராக விஜய் அறிவித்துப் பேசினார் என்று சாடியுள்ளார். ஆனால், தேர்தலில் அம்மக்களின் வாக்குகள் கிடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, முதலமைச்சர் விஜய்க்கு அம்பேத்கர் தேவையில்லாமல் போய்விட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

தேர்தல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்திவிட்டு, இப்போது அந்தச் சிலையைத் திறப்பதைப் பற்றி முதலமைச்சர் விஜய்க்கு எந்தக் கவலையும் இல்லை என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார். தவெக அரசுக்கு எதிராக பா.ரஞ்சித் போன்ற முற்போக்கு ஆளுமைகளும் ஏற்கனவே இதே போன்றதொரு விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையில், தற்போது வேல்முருகனின் இந்த காட்டமான பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in