LATEST NEWS
“பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்” தவெக எம்.எல்.ஏ. கல்லாணை தூள் கிளப்பிய அதிரடி முழக்கம்.. மாணிக்கம் தாகூருக்கு மாஸ் பதிலடி..!!
தவெக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கல்லாணை, விஜய் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் என்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியது போல, அவர் தேசிய அளவிலும் உயர்வார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் விடுத்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே எம்.எல்.ஏ. கல்லாணை இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். விஜய் மீதான தங்களது ஆதரவு வெறும் ரசிக மனப்பான்மையால் ஏற்பட்டது அல்ல என்றும், அது அவரது உண்மையான அரசியல் வளர்ச்சியைக் குறிக்கிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழக மக்களின் முழுமையான ஆதரவு விஜய்க்கு இருப்பதாகவும், அவர் இந்தியாவை வழிநடத்தும் ஆற்றல் கொண்ட தலைவராக உருவெடுப்பார் என்றும் கல்லாணை திட்டவட்டமாகத் தெரிவித்தார். தவெக தரப்பில் விஜயை தேசியத் தலைவராக முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
