LATEST NEWS
“பேருந்து மோதி நின்று போன இதயம்” 2 நிமிடம் போராடி பெண்ணை உயிர்ப்பித்த நர்சிங் மாணவி… இவர் தான் நிஜ கடவுள்… நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்…!!
ஹரியானா மாநிலம் கர்னாலில் விபத்தில் சிக்கி சுயநினைவிழந்த பெண்ணுக்கு, நர்சிங் மாணவி ஒருவர் சமயோசிதமாக சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். கர்னாலில் ஹரியானா அரசுப் பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து, மாரடைப்புக்கு ஆளானார். அப்போது கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சோனாக்ஷி என்ற நர்சிங் மாணவி, சாலையோரம் அப்பெண் அசைவற்று கிடப்பதைக் கண்டு உடனடியாக உதவ முன்வந்தார்.
ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், சோனாக்ஷி அந்தப் பெண்ணுக்கு சுமார் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து நெஞ்சுப் பகுதி அழுத்தங்களை (Chest Compressions) வழங்கினார். அதே நேரத்தில், அங்கிருந்த பொதுமக்களிடம் ஆம்புலன்ஸை அழைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார். மாணவியின் இந்தத் தீவிர முயற்சியின் பலனாக, சுயநினைவிழந்த பெண்ணின் நாடித் துடிப்பு மீண்டும் சீரானது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமானதால், சோனாக்ஷி சற்றும் தயங்காமல் சாலையில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி, அப்பெண்ணை மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பினார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவர்கள் பொறுப்பேற்கும் வரை அந்தப் பெண்ணுக்குத் தேவையான அவசரகால சிபிஆர் சிகிச்சையை அவர் தொடர்ந்து அளித்துக் கொண்டே சென்றார். அவசர காலங்களில் சிபிஆர் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தச் சம்பவத்திற்காக மாணவி சோனாக்ஷியின் துணிச்சலான செயலை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
