LATEST NEWS
“காதலித்து திருமணம் செய்தது குற்றமா?.. காதல் ஜோடியை துரத்தித் துரத்தி அடித்த பெண் வீட்டார்… கழுத்துத் தாலியை அறுத்து எறிந்த கொடூரம்.. SP ஆபீஸை அதிரவைத்த கொடூர சம்பவம்..”!!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சிவ சினேகா மற்றும் சந்து என்ற புதுமணத் தம்பதியினர் மீது, பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமானத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரின் மிரட்டலால், தங்களுக்குப் பாதுகாப்பு கோரி திருப்பதி எஸ்பி அலுவலகத்தை நோக்கி இந்தத் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த போதே, அவர்களை வழிமறித்த பெண்ணின் வீட்டார் கடுமையாகத் தாக்கி, மணப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியையும் அறுத்து எறிந்துள்ளனர்.
ప్రేమ జంటపై దాడి చేసి తాళి తెంపేసిన కుటుంబ సభ్యులు
తిరుపతిలో ప్రేమించి పెళ్లి చేసుకున్న నవ దంపతులు శివ స్నేహ, చందులపై వధువు కుటుంబ సభ్యులు దారుణానికి ఒడిగట్టారు. రక్షణ కోరి తిరుపతి ఎస్పీ ఆఫీస్కు వెళ్తుండగా కుటుంబ సభ్యులు దాడి చేసి, మెడలోని తాళిబొట్టు తెంపేశారు. భయంతో ఓ… pic.twitter.com/4Y2Vd4C1Yk— BIG TV Breaking News (@bigtvtelugu) July 24, 2026
தாக்குதலுக்குப் பயந்து ஓடிய காதல் ஜோடி, அருகில் இருந்த ஓர் அலுவலகத்திற்குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு, எஸ்டபிள்யூ பல்கலைக்கழகப் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காதல் திருமணத்திற்காகத் தாலியை அறுத்து எறியும் அளவிற்குப் பெண்ணின் குடும்பத்தினர் நடந்து கொண்ட இந்த கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
