CRIME
“அடப்பாவிகளா..! வனத்துறை ஊழியர்கள்னு பொய் சொல்லி நீட் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய 3 காம கொடூரர்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசம் – உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதியான சித்திரகூடில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த 20 வயது நீட் மாணவி ஒருவர், தனது 17 வயது நண்பருடன் சேர்ந்து மலைப் பகுதியில் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது வனத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மூன்று நபர்கள் அவர்களை மறித்துள்ளனர். தட்டிக்கேட்ட மாணவியின் நண்பரை பெல்ட்டால் தாக்கி, கைகால்களைக் கட்டி புதரில் வீசியுள்ளனர். பின்னர் அம்மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
சம்பவத்திற்குப் பின், சிறுவன் போராடித் தன்னை விடுவித்துக்கொண்டு அவசர உதவி எண்ணான 112-க்கு அழைத்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளான். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்புப் பணிகளுக்குப் பின் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சித்திரகூட் காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் சிங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எஞ்சிய குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது.
