LATEST NEWS
“நாங்கள் கேக்குறது வறட்சி நிவாரணம்… பேப்பர் படிச்சா மட்டும் போதாது…!” CM விஜய்க்கு உதயநிதி கொடுத்த காட்டமான பதிலடி..!!
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்தது. பேரவையில் விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், “விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்; ஆனால் அந்த நிவாரண உதவிகள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுவிட்டன. தினமும் பேப்பர் படித்தாலே இது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்” என்று கூறினார். முதலமைச்சரின் இந்தப் பதிலைக் கேட்டு அதிருப்தியடைந்த திமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு, அரசுக்கு எதிராக பலத்த கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் கேட்பது விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி. அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை அறிய நாளிதழ்களைப் படித்தால் மட்டும் போதாது; களத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்தார். இதனால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் நிலவியது.
