LATEST NEWS
“இரயிலில் ஒன்று.. பிளாட்பாரத்தில் ஒன்று..” ஓடும் இரயிலில் அலறிய கர்ப்பிணி.. தேவதைகளாக வந்த திருநங்கைகள் செய்த காரியம்.. நடுவழியில் நடந்த நிஜ அதிசயம்.. இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
டெல்லியிலிருந்து பீகாருக்கு இரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, பயணத்தின் போதே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இரயில் பீகார் ஷெரீப் இரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த திருநங்கைகள் மற்றும் அரசு இரயில்வே காவல் துறை பணியாளர்கள் உடனடியாக விரைந்து வந்து, பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற உதவி செய்தனர். முதல் குழந்தை இரயிலின் உட்பகுதியிலேயே பிறந்த நிலையில், இரண்டாவது குழந்தை இரயில் நிலைய நடைமேடையில் பிறந்தது.
दिल्ली से बिहार लौट रही एक गर्भवती महिला ने सफर के दौरान प्रसव पीड़ा शुरू होने पर चलती ट्रेन में जुड़वा बच्चों को जन्म दिया। बिहारशरीफ स्टेशन पहुंचने पर किन्नर समुदाय और जीआरपी जवानों ने तत्परता दिखाते हुए सुरक्षित प्रसव में मदद की। पहला बच्चा ट्रेन के भीतर, जबकि दूसरा प्लेटफॉर्म… pic.twitter.com/4SUrethSe7— News4Nation (@news4nations) August 6, 2026
இதனைத் தொடர்ந்து, தாய் மற்றும் பிறந்த இரு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காகத் தாய்சேய் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதற்கட்ட தகவல்களின்படி, தாய் மற்றும் இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான நேரத்தில் திருநங்கைகளும் இரயில்வே காவல் துறையினரும் காட்டிய மனிதநேய உணர்வும், அவர்களின் உடனடி உதவியும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
