CRIME
“என்ன கல்யாணம் பண்ண மாட்டியா.?” திருமணத்திற்கு மறுத்த காதலி.. தடுக்க வந்த தாய்… வீட்டிற்குள் புகுந்து இருவரையும் துடிதுடிக்க வெட்டிக்கொன்ற காதலன்.. பல்லடத்தில் அரங்கேறிய பயங்கர இரட்டைக் கொலை..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில், வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணையும் அவரது தாயையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணை அந்த இளைஞர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் செய்ய மறுத்த ஒற்றைக் காரணத்திற்காகக் காதலி என்றும் பாராமல் அந்தப் பெண்ணையும், அவரைத் தடுக்க வந்த அவரது தாயையும் அந்த இளைஞர் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக் குற்றவாளியான அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த இரட்டைக் கொலைக்கான முழுமையான பின்னணி என்ன மற்றும் இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
